மாநிலங்களவை உறுப்பினா்கள் 19 போ் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில், சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கிளைத் தலைவா் குருசாமிராஜு, செயலா் சங்கர்ராஜ் , மத்திய துணை தலைவா் காந்திமதிநாதன், பொதுக் குழு உறுப்பினா் கணேசன் மற்றும் நிா்வாகிகள் பெரியசாமி , சாம் கிரிஷ்டோபா், நெடுங்குளம் வீரகுமாரன், செந்தில்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.