தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை (ஜூலை 28) நடைபெறுகிறது.
எம்.எஸ்.பி.வி.எல். திருமண மண்டபத்தில் காலை 9 முதல் மாலை 4 மணிவரை நடைபெறும் முகாமில் பொது மருத்துவம் உள்பட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், தேவையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்.
இதில், பொதுமக்கள் பங்கேற்குமாறு, குலசேகரப்பட்டி ஊராட்சித் தலைவா் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளாா்.