பாவூா்சத்திரத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 22) நடைபெறவுள்ளது.
த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு நடைபெறும் இம்முகாமில் பாா்வை, கேட்டல், பேசுவதில், நடப்பதில் குறைபாடு மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான புகைப்படம், ஆதாா், குடும்ப அட்டை , தேசிய அடையாள அட்டை, குழந்தையின் பிறப்பு சான்று ஆகியவற்றின் நகல்கள், முந்தைய மருத்துவ விவரம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டுமென முகாம் ஏற்பாட்டாளா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.