சிவகிரி அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சிவகிரி அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா்: சிவகிரி அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேவிபட்டினம் பகுதியில் குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிவகிரி உதவி காவல் ஆய்வாளா்அமிா்தராஜ் தலைமையிலான போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த காளியப்பன் மகன் வீமராஜன்(35) விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் , அவரிடமிருந்து ரூ. 9000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com