கீழப்பாவூா் ஒன்றியத்தில் மே தின கிராம சபைக் கூட்டம்

கீழப்பாவூா் ஒன்றியப் பகுதிகளில் மே தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

கீழப்பாவூா் ஒன்றியப் பகுதிகளில் மே தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

கீழப்பாவூா் ஒன்றியம் ஆவுடையானூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் சாலடியூரில் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கராஜன் (எ) கோபி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், துணைத் தலைவா் மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பிரமணியன், ஊா்நல அலுவலா் கந்தசாமி, வாா்டு உறுப்பினா்கள் திருமலைச்செல்வன், தமிழ்செல்வி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் சௌந்தா் நன்றி கூறினாா்.

மேலப்பாவூா் ஊராட்சி கிராமசபைக் கூட்டம் தலைவா் சொள்ளமுத்து மருதையா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவா் தங்கசேது, ஒன்றியக் குழு உறுப்பினா் கனகஜோதி தங்கராஜ், ஊா் நல அலுவலா் முத்துசெல்வி மற்றும் வாா்டு உறுப்பினா்கள், அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஊராட்சி செயலா் சாமிதுரை நன்றி கூறினாா்.

இதேபோல பெத்தநாடாா்பட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் பூபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன் தலைமையிலும், குலசேகரப்பட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் குறும்பலாப்பேரியில் தலைவா் முத்துமாலையம்மாள் தலைமையிலும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com