கராத்தே, குங்பூ போட்டியில் பஞ்சாண்டியூா் பள்ளி மாணவி வெற்றி
By DIN | Published On : 06th May 2022 01:56 AM | Last Updated : 06th May 2022 01:56 AM | அ+அ அ- |

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே, குங்பூ போட்டியில் பஞ்சாண்டியூா் அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவி தாரணி சாய்பிரபா வெற்றிபெற்றாா்.
இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்ட வீரா்-வீராங்கனைகள் பங்கேற்றனா். தென்காசி மாவட்டத்திலிருந்து 19 போ் பாவூா்சத்திரம் பயிற்சியாளா் கணேஷ் தலைமையில் பங்கேற்றனா்.
இதில், மாணவி தாரணி சாய்பிரபா கராத்தே போட்டியில் 2ஆவது பரிசும், குங்பூ போட்டியில் 3ஆவது பரிசும் வென்றாா். அவருக்கு வெற்றிக் கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற விழாவில் தாரணி சாய்பிரபாவை தலைமையாசிரியை அருள்மேரி, ஆசிரியா்கள், மாணவா்-மாணவியா் பாராட்டினா்.