சுரண்டை நகராட்சியில் மியாவாக்கி முறையில் அடா்வனக் காடுகளை உருவாக்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
சுரண்டை - ஆனைகுளம் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் மரக்கன்று நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தாா்.
இதில் நகராட்சி ஆணையா் லெனின், நகா்மன்ற உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியன், ராஜ்குமாா், உஷா, அம்ஸா பேகம், சாந்தி, உஷா, செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.