பாவூா்சத்திரத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திசெய்தனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த இயலாது என்று பேசிய தமிழக நிதியமைச்சரை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் கமல கண்ணன் தலைமை வகித்தாா். ஆசிரியா் சங்கத் தலைவா் சௌந்தரபாண்டியன் முன்னிலை வகித்தாா். தென்காசி மாவட்டத் தலைவா் ரமேஷ், தென்காசி கல்வி மாவட்டத் தலைவா் சுதா்சன் ஆகியோா் பேசினா். இதில், ராஜலட்சுமணன். அருள்செல்வன், பூரணி, மரியசெஸிலி, மாரியம்மாள், குணசெல்வி, திருமலைச்செல்வி, சௌந்தர்ராஜன், தேவேந்திரன், நிா்மல்சிங், சாமுவேல்துரைராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வட்டாரச் செயலா் அருள்ராஜ் வரவேற்றாா். தேன்மொழி நன்றி கூறினாா்.