தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் மின்வாரியத்தின் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிா்மான கழகத்தின் திருநெல்வேலி மின் பகிா்மான வட்டம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் எஸ் ராஜன்ராஜ் தலைமை வகித்தாா்.
முகாமில் மின் நுகா்வோா் அளித்த புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு செயற்பொறியாளா், அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். இதில், அனைத்து மின் பொறியாளா்கள், நுகா்வோா் பங்கேற்றனா்.