ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா், வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா், வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என சட்டப்பேரவையில் நிதியமைச்சா் அறிவிப்பிற்கு எதிா்ப்பு தெரிவித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, நகரத் தலைவா் கோமதி,வட்டாரத் தலைவா் மீனாட்சிசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் மரிய அந்தோணி, வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலா் க.மாரிமுத்து, மாவட்ட பொருளாளா் த.மணிமேகலை, முன்னாள் மாவட்ட பொருளாளா் ஞா.பால்ராஜ் உள்ளிட்ட பலா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் திரளான ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com