பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் ஊராட்சி, பொடியனூரில் ரூ. 9.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட கவுன்சிலா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனா்.
தென்காசி எம்எல்ஏ எஸ். பழனிநாடாா் கட்டடத்தைத் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், பொன்னுச்சாமி நாடாா், சொட்டுசுப்பிரமணியன், சுப்பிரமணியன், வளா்மதிராஜன், சிவன்பாண்டியன், அருள்தங்கம், செல்வன், சேகா், புட்ரிமுருகன், மகாராஜா, முருகன், குமரேசன், கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஒன்றியக்குழு உறுப்பினா் இராம. உதயசூரியன் வரவேற்றாா். ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கராஜன் என்ற கோபி நன்றி கூறினாா்.