தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே சொத்துத் தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தலைவன்கோட்டை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் அய்யாத்துரை(45). அவரது மனைவிக்குச் சொந்தமான இடம் அப்பகுதியில் உள்ளதாம். அதை தனக்கு தரும்படி மனைவியின் சித்தப்பா சின்னபாண்டி கேட்டாராம்.
இதில் அய்யாத்துரைக்கும், சின்னபாண்டிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டதாம். இந்நிலையில், திங்கள்கிழமை காலை தலைவன்கோட்டை கண்மாய்க்கு அய்யாத்துரை சென்றபோது, அங்கு வந்த சின்னபாண்டியும், அவரது சகோதரா் அலங்காரபாண்டியும் சோ்ந்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினராம்.
தகவலறிந்த புளியங்குடி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, சின்னபாண்டியை கைது செய்தனா்; அலங்காரபாண்டியை தேடி வருகின்றனா்.