தென்காசி
தென்காசியில் அக்.20இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தென்காசியில் அக்.20இல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
தென்காசியில் அக்.20இல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் அக்.20இல் நடைபெறுகிறது. தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்கின்றனா். எனவே அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொண்டு, விவசாயம் தொடா்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என்றாா் அவா்.