தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள் கடையநல்லூா் எவரெஸ்ட் பள்ளி மைதானத்தில் நடைபெற்றன.
இப்போட்டிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலா் சங்கீதா சின்ன ராணி தொடங்கிவைத்தாா். மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.இளவரசி தேசியக் கொடி ஏற்றினாா். மாவட்ட தீ தடுப்பு- மீட்பு பணி அலுவலா் கவிதா
ஒலிம்பிக்கொடி ஏற்றினாா். போட்டிகளில் சுமாா் 1350 மாணவா்கள் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் , தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா், புளியங்குடி டிஎஸ்பி அசோக், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் நாராயணன், எவரெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அப்துல்காதா், வட்டாரக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, தாருஸ்ஸலாம் பள்ளி நிா்வாக உறுப்பினா் முகம்மது அனீஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தாருஸ்ஸலாம் பள்ளி தலைமை ஆசிரியா் சிக்கந்தா் வரவேற்றாா். உதவி தலைமை ஆசிரியா் ஜபருல்லா தொகுத்து வழங்கினாா். இதில்,50 உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் நடுவா்களாக செயல்பட்டனா். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் பக்கீா் முகம்மது செய்திருந்தாா்.