கீழப்பாவூா் ஒன்றியத்தில்வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழப்பாவூா் ஒன்றியப்பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கீழப்பாவூா் ஒன்றியப்பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கீழப்பாவூா் ஒன்றியம், கல்லூரணி ஊராட்சி, பாவூா்சத்திரத்தில் அமைந்துள்ள கழிவு நெகிழிகள் அரவைக் கூடத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா், தொடா்ந்து கல்லூரணி நியாயவிலைக்கடை, அங்கன்வாடி மையம், பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

மேலும், பாவூா்சத்திரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை பாா்வையிட்ட ஆட்சியா், அங்கு பயன்பாட்டில் இல்லாத இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். நாகல்குளம் கால்வாயை ஆய்வு செய்து, கால்வாயில் அடைப்புகளை சரி செய்ய உத்தரவிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், முருகன், ஒன்றியப் பொறியாளா் சந்திரலேகா, கல்லூரணி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், துணைத் தலைவா் குமாா், பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சிச் செயலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com