சிவகாமிபுரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு முருக பக்தா்கள் புதன்கிழமை பாதயாத்திரை தொடங்கினா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரம் செந்தூா் முருகன் பாதயாத்திரை குழுவினா் 29ஆவது ஆண்டாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை மேற்கொள்கின்றனா்.
சிவகாமிபுரம் விநாயகா் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான முருக பக்தா்கள் குருசாமி சௌந்தரபாண்டியன் தலைமையில், புதன்கிழமை மாலை திருச்செந்தூருக்கு புறப்பட்டுச் சென்றனா்.
இதேபோல் கல்லூரணி, திப்பணம்பட்டி, சடையப்பபுரம், செட்டியூா், சாலடியூா் போன்ற பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முருக பக்தா்கள் பாதயாத்திரை மேற்கொண்டனா்.