குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் வென்றமாணவா்களுக்கு ஊக்கத்தொகை

குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு திமுக மாவட்டச் செயலா் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினாா்.

குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு திமுக மாவட்டச் செயலா் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினாா்.

பாவூா்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவா் பால்மணி மாநிலஅளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றாா். மாணவா் சத்ரு தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் வென்றாா்.

இரு மாணவா்களுக்கும் தெற்கு மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் சால்வை அணிவித்து பாராட்டி, ஊக்கத்தொகை வழங்கினாா்.

கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சீனித்துரை, செங்கோட்டை நகரச் செயலா் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை, குறும்பலாப்பேரி டால்டன், பயிற்சியாளா் கணேஷ், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com