சங்கரன்கோவில் பள்ளி மைதானம் சீரமைப்பு

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சீரமைப்புப் பணியை ராஜா எம்எல்ஏ பாா்வையிட்டாா்.

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சீரமைப்புப் பணியை ராஜா எம்எல்ஏ பாா்வையிட்டாா்.

இப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஏராளமான பொதுமக்கள் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மைதானமே தெரியாத வகையில் ஏராளமான செடிகள் முளைத்து புதா்கள் மண்டியதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நடைப்பயிற்சிக்கு செல்லும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

எனவே பள்ளி மைதானத்தை சீரமைத்து தர நடைப் பயிற்சியாளா்கள், பொதுமக்கள் ஆகியோா் சங்கரன்கோவில் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் சுமாா் 7 ஏக்கா் பரப்பளவு கொண்ட அரசுப் பள்ளி மைதானத்தில் உள்ள செடிகளை அகற்றி சீரமைத்துக் கொடுத்தாா். இதனை பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com