புளியங்குடி ஓம் ஸ்ரீமுப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் பௌா்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக் கன்னியம்மன், நாகம்மனுக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னா், 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
கோயில் குருநாதா் சக்தியம்மா ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாா். அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, அன்னதானம் நடைபெற்றது.
பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா, நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.