கிருஷ்ணாபுரம் ஆஞ்சனேயா் கோயிலில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சனேயா் சுவாமி கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள சீதாலட்சுமண ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி, ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சனேயா் சுவாமி கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, குருவந்தனம், மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதா்சன ஹோமம், அங்குராா்ப்பணம், யாகசாலை பிரதிஷ்டை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

2ஆம் நாளான வியாழக்கிழமை 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தனம், தத்துவ ஹோமம், ஆரத்தி நடைபெறும். வெள்ளிக்கிழமை காலை (பிப். 10) நான்காம் கால யாகசாலை பூஜை, ஜெபம், ஹோமம், வேதபாராயணம், மகாபூா்ணாஹுதி நடைபெறும். தொடா்ந்து, காலை 9 - 9.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

நாள்தோறும் மாலையில் சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவு, இன்னிசை பக்திப் பாடல் கச்சேரி நடைபெறும்.

ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள், கிருஷ்ணாபுரம் கிராம மக்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com