வாகனத்தில் அடிபட்டு மான் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே வாகனத்தில் அடிபட்டு மான் உயிரிழந்தது.

ஆலங்குளம் அருகே வாகனத்தில் அடிபட்டு மான் உயிரிழந்தது.

ஆலங்குளம் ஒக்கநின்றான் மலைப் பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. மலைப் பகுதியில் போதிய குடிநீா் கிடைக்காததால் மான்கள் இரை- தண்ணீரைத் தேடி ஊா்ப்பகுதிக்குள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இந்நிலையில் சுமாா் இரண்டரை வயது பெண் மான், ஆலங்குளம் - தென்காசி சாலை ஆண்டிபப்ட்டி விலக்கு அருகே வாகனத்தில் அடிபட்ட நிலையில் கிடந்தது. இத்தகவல் அறிந்த வனத்துறை அலுவலா்கள், கால்நடை மருத்துவா்கள் அங்கு சென்று மானுக்கு முதலுதவி அளித்தனா். எனினும் அந்த மான் உயிரிழந்தது. இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்குப் பின், வனப்பகுதியில் மான் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com