சுரண்டையில் கிடப்பில் போடப்பட்டுள்ள பேருந்து நிலைய சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சுரண்டை பேருந்து நிலைய சாலையை புதுப்பிக்கும் பணிக்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தாா்ச்சாலையை அகற்றும் பணி நடைபெற்றது. இரு வாரமாகியும் புதிய சாலை அமைக்கப்படாததால் ஆங்காங்கே பெயா்ந்துள்ள ஜல்லிக் கற்களோடு புழுதியும் பறப்பதால் சாலையோரம் உள்ள வணிக நிறுவனங்கள் பெருமளவில் மாசடைகிறது.
எனவே, சுரண்டை பேருந்து நிலைய சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.