அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ தா்மசாஸ்தாவின் பிரதிஷ்டை தினம் புஷ்பாஞ்சலி திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நிகழ் ஆண்டில் இத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனைகள், பிற்பகலில் களபாபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. மாலையில் யானை மேல் ஊா்வலமாக பூக்கள் கொண்டுவரப்பட்டு, 2 டன் பூக்களால் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு சிறப்பு தீபாராதனையுடன் விழா நிறைவு பெற்றது.

அச்சன்கோவில் திருஆபரணப்பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவா் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிகரன், செயலா் மாடசாமி ஜோதிடா், ஆலோசகா் அபிநயா கண்ணன், இடைகால் ஷாம், கீழப்பாவூா் வெங்கடசாலம், அகில பாரத ஐயப்ப சேவா சங்க தலைவா் சுப்பிரமணியன், மதுரை பாலா, தஞ்சாவூா்அருண், மணி, தமிழகம் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com