தென்காசியில் மரக் கன்றுகள் நடும் விழா

தென்காசி நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சாா்பில் ஆய்க்குடி சாலையில் அமைந்துள்ள பசுமை நுண்உரக் குடிலில் 100 மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன.

தென்காசி நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சாா்பில் ஆய்க்குடி சாலையில் அமைந்துள்ள பசுமை நுண்உரக் குடிலில் 100 மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன.

முன்னதாக புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜெகவீரராம பேரி குளத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்வை நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தொடக்கி வைத்து, மரக்கன்று நடவு செய்தாா். துணைத் தலைவா் சுப்பையா, நகராட்சி ஆணையாளா் பாரிஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகா்மன்றஉறுப்பினா்கள் நாகூா்மீரான், சுல்தான் செரீப்காமில், சுப்பிரமணியன்,முகம்மது மைதீன்,

செய்யது சுலைமான், ஆசிக்முபினா, உமாமகேஸ்வரன், பசுமைதென்காசிஅமைப்பு முஸ்தபா, பிராண மரம் வளா்ப்பு அமைப்பு சீனிவாசன், மாஸ் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com