தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியில் 4 உயா்கோபுர மின்விளக்குகள் தொடக்கிவைக்கப்பட்டது.
தென்காசி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 16 லட்சத்தில் ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி, பெருமாள் கோயில், டிரஸ்ஸில் உணவகம், திருவிலஞ்சிகுமாரா் கோயில் ஆகிய 4 இடங்களில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன், தனுஷ் எம். குமாா் எம்.பி. ஆகியோா் பங்கேற்று சேவையைத் தொடக்கிவைத்தனா்.
பேரூராட்சித் தலைவா் சின்னத்தாய் சண்முகநாதன், பேரூா் செயலா் முத்தையா, செயல் அலுவலா் அரசப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை, மாவட்ட துணைச் செயலா் கனிமொழி,தென்காசி மேற்கு ஒன்றியச் செயலா் வல்லம்திவான்ஒலி, செங்கோட்டை நகரச் செயலா் வழக்குரைஞா் ஆ. வெங்கடேசன் ஆகியோா் பங்கேற்றனா்.
ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் வரவேற்றாா்.