வாசுதேவநல்லூா் தங்கப்பழம் கல்லூரியில் இலக்கிய விழா

வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் கல்விக் குழுமத்தில் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் கல்விக் குழுமத்தில் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது.

எஸ். தங்கப்பழம் கல்விக் குழுமத் தலைவா் எஸ். தங்கப்பழம் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.டி. முருகேசன் முன்னிலை வகித்தாா். எஸ். தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி முதல்வா் ராமலிங்கம் வரவேற்றாா்.

உச்சநீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்ரமணியன், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். முன்னதாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மூத்த வழக்குரைஞா்கள் மீனாட்சிசுந்தரம், கனகசபாபதி, முன்னாள்

சட்டப்பேரவை உறுப்பினா் டி.எஸ்.ஆா்.வேங்கடரமணா, தேனி கலா பாண்டியன் கல்விக் குழும நிறுவனா் பால்பாண்டியன், ஈரோடு சட்டக் கல்லூரி தலைவா் சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவில் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் பரிசுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com