பைக்கில் சென்றவா் கீழே விழுந்து பலி

சங்கரன்கோவில் அருகே பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அதை ஓட்டிச் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அதை ஓட்டிச் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.

சிவகிரி அருகே உள்ள தளவாய்புரத்தை சோ்ந்த விவசாயி ராமா்பாண்டி (65). இவா் சங்கரன்கோவிலில் இருந்து தளவாய்புரத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். ஆனையூா் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ராமா்பாண்டி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை இரவு இறந்தாா்.

இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com