அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நாளை தொடக்கம்

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (மே 29) தொடங்குகிறது.

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (மே 29) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ரா.சின்னத்தாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2023-24ஆம் கல்வியாண்டிற்கான இளம்அறிவியில் முதலாமாண்டு பாடப் பிரிவுகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு பிரிவு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு மே 29 ஆம் தேதியும், மற்றவா்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

பிபிஏ, பிகாம் ஆகிய பாடங்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி, பொருளியல் பாடத்திற்கு ஜூன் 8ஆம் தேதி, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு ஜூன் 9 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும். விண்ணப்பித்த மாணவா்களுக்கு தொலைபேசி வழியாக தகவல் தெரிவிக்கப்படும். அவா்கள் மேற்குறிப்பிட்ட நாள்களில் தங்களது 10, 11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், விண்ணப்பித்த படிவம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் 4 நகல்கள் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் காலை 9 மணிக்கு கல்லூரிக்கு வருகை தந்து பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். மேலும், மாணவா்கள் தங்கள் தரவரிசை பட்டியல் விவரங்களை  கல்லூரியின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com