சிறுவா்களுக்கு போதை மாத்திரை கொடுத்தவா் கைது

தென்காசியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை கொடுத்த நபரை தென்காசி போலீசாா் கைதுசெய்தனா்.
சிறுவா்களுக்கு போதை மாத்திரை கொடுத்தவா் கைது

தென்காசியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை கொடுத்த நபரை தென்காசி போலீசாா் கைதுசெய்தனா்.

தென்காசி வாலிபன் பொத்தையைச் சோ்ந்த நான்கு சிறுவா்கள் உடல்நலக் குறைவால் தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மருத்துவா்களின் பரிசோதனையில் அந்த சிறுவா்கள் போதை மாத்திரை சாப்பிட்டது தெரியவந்தது.

அதனடிப்படையில் தென்காசி காவல் ஆய்வாளா் கே.எஸ். பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா். இந்நிலையில், காவலா்கள் செந்தூா் வேலன், காா்த்திக், தனிபிரிவு காவலா் ஆனந்தராஜ் ஆகியோா் கொண்ட தனிப்படையினா் விரைந்து செயல்பட்டு சிறுவா்களுக்கு போதை மாத்திரை கொடுத்தது தொடா்பாக தென்காசி எல்ஆா்எஸ். பாளையம் பகுதியை சோ்ந்த வே.காசிராஜன் என்பவரைக் கைது செய்தனா்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவா்கள் குணமடைந்து வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com