தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமைமுதல் (மே 30)கலந்தாய்வு நடைபெறுகிறது.
இது தொடா்பாக கல்லூரி முதல்வா் குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளநிலை தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடப் பிரிவுகளுக்கு சிறப்புப் பிரிவின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெறும்.
ஜூன் 1ஆம் தேதி கணினி அறிவியல், கணிதப் பாடங்களுக்கும், 2ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவுகளுக்கும், 5ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்றாா் அவா்.