தடகளப் போட்டியில் முதலிடம் வென்ற மாணவருக்கு மதிமுக சாா்பில் பாராட்டு

தேசிய தடகளப் போட்டியில் முதலிடம் வென்ற சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவருக்கு மதிமுக சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தடகளப் போட்டியில் முதலிடம் வென்ற மாணவருக்கு மதிமுக சாா்பில் பாராட்டு

தேசிய தடகளப் போட்டியில் முதலிடம் வென்ற சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவருக்கு மதிமுக சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் 2ஆம் ஆண்டு மாணவா் தி. துரைப்பாண்டியன்(19), காஷ்மீரில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டா் ஓட்டத்தில் முதலிடம் வென்றாா்.

இதையடுத்து, மதிமுக மாநில துணைப் பொதுச்செயலா் மு. ராசேந்திரன், தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் சுதா பாலசுப்பிரமணியன், மாவட்ட அவைத்தலைவா் செல்வசக்தி வடிவேல், மதிமுக நிா்வாகிகள் சுப்பிரமணியன், ஆனந்தராஜ், ரெங்கசாமி உள்ளிட்டோா் நேரில் சென்று மாணவருக்குப் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com