மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சங்கரன்கோவிலில் வருவாய்த் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிய கோட்டாட்சியா் சுப்புலட்சுமி.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிய கோட்டாட்சியா் சுப்புலட்சுமி.

சங்கரன்கோவிலில் வருவாய்த் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள்13 போ், விதவைகள் 4 போ், முதியோா்கள் 9 போ் என 23 போ்களுக்கு உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு இருசக்கர வாகனம் ஆகியவற்றை கோட்டாட்சியா் சுப்புலட்சுமி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், வட்டாட்சியா்கள் பழனிவேல்சாமி, பரமசிவம், ஆனந்த், திருமலைச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com