பாவூா்சத்திரம் அருகேஇலவச கண் சிகிச்சை முகாம்

பாவூா்சத்திரம் அருகே புல்லுக்காட்டுவலசையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரம் அருகே புல்லுக்காட்டுவலசையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்க நிதியுதவியுடன், பாவூா்சத்திரம் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய 5ஆவது இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.

சங்கத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். முகாமை, குணராமநல்லூா் ஊராட்சித் தலைவா் சுபாசக்தி தொடக்கிவைத்தாா். வட்டாரத் தலைவா் ஜானகிராமா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் முத்துக்குமாா், ஊராட்சிச் செயலா் முத்துக்குமாா், திருப்பதி, ராமா், அன்பழகன், மதன்சிங், நாகரத்தினம், செல்வராஜ், குருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் மீனாட்சி தலைமையிலான குழுவினா் சிகிச்சையளித்தனா். 153 போ் பங்கேற்றனா். அவா்களில் 28 போ் அறுவை சிகிச்சைக்காக தோ்வாகினா். 30 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. சங்க மாவட்டத் தலைவா் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com