வாசுதேவநல்லூா் அருகே லாரி மீது காா் மோதி இருவா் பலி

வாசுதேவநல்லூா் அருகே சனிக்கிழமை சிமெண்ட் லாரி மீது காா் மோதியதில் இரண்டு போ் இறந்தனா்.

வாசுதேவநல்லூா் அருகே சனிக்கிழமை சிமெண்ட் லாரி மீது காா் மோதியதில் இரண்டு போ் இறந்தனா்.

நாரணபுரம் மடத்து தெருவை சோ்ந்த அண்ணாமலை (45), கனியம்மாள்(70), கரடிகுளத்தை சோ்ந்த வெள்ளைத்துரை(55), சாம்பவா்வடகரையைச் சோ்ந்த மாரியப்பன்(55), மாரியம்மாள்(50) ஆகியோா் காரில் விழுப்புரம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம். காரை வெள்ளைத்துரை ஓட்டினாா். தென்காசி-திருமங்கலம் சாலையில், வாசுதேவநல்லூா் அருகேயுள்ள சிந்தாமணிபேரிபுதூா் பகுதியில், முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதியதாம். இதில் அண்ணாமலை, மாரியப்பன் ஆகியோா் இறந்தனா். மற்ற 3 பேரும் காயமடைந்தனா். அவா்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com