தென்காசி
சோ்ந்தமரம் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
சோ்ந்தமரம் பகுதியில் தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாா் வாக்கு சேகரித்தாா்.
சோ்ந்தமரம், நடுவக்குறிச்சி, கடையாலூருட்டி, பாண்டியாபுரம், வெள்ளாளங்குளம், தா்மத்தூரணி ஆகிய கிராமங்களில் சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜாவுடன் சென்று வாக்கு சேகரித்தாா்.
இதில் திமுக நிா்வாகிகள் ராமச்சந்திரன், செல்லத்துரை, வினு சக்கரவா்த்தி, பண்டாரக்கண்ணு, பிரேம்குமாா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.