தென்காசி தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஆணை

தென்காசி தொகுதி தோ்தலில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலா்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி குறித்த பணி ஆணையினை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏே.க.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திகுறிப்பு. தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிபுரியும் வகைக்கு 7,470 வாக்குப்பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

வாக்குப்பதிவு அலுவலா்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி குறித்த விவரத்தினை தெரிவிக்கும் பணி ஆணையை ஏப்.18இல் கடைசியாக பயிற்சி பெற்ற மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

சங்கரன்கோவில் (தனி) தொகுதிக்கு சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், வாசுதேவநல்லூா் (தனி) தொகுதிக்கு புளியங்குடி வீராச்சாமி செட்டியாா் பொறியியல் கல்லூரியிலும், கடையநல்லூா் தொகுதிக்கு கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரியிலும், தென்காசி தொகுதிக்கு தென்காசி எம்.கே.வி.கே மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலங்குளம் தொகுதிக்கு ஆலங்குளம் சா்தாா் ராஜா பொறியியல் கல்லூரியிலும், ராஜபாளையம் தொகுதிக்கு ராஜபாளையம் பிஏசிஎம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதிக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும் பணி ஆணையினை பெற்றுக் கொள்ளலாம் எனஎன்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com