தென்காசி
சங்கரன்கோவிலில் அதிமுக இறுதிக் கட்ட பிரசாரம்
சங்கரன்கோவிலில் அதிமுக கூட்டணி வேட்பாளா் டாக்டா் க. கிருஷ்ணசாமி புதன்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் டாக்டா் க. கிருஷ்ணசாமி சங்கரன்கோவில் தேரடித் திடலில் வாக்கு சேகரித்தாா். பின்னா் அங்கிருந்து தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, பிரதான சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அவருடன், முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா, அதிமுக கொள்கை பரப்பு மாநில துணைச் செயலா் எஸ். அய்யாத்துரைபாண்டியன், நகரச் செயலா் ஆறுமுகம் உள்ளிட்ட திரளான அதிமுகவினா் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.