தென்காசி
சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி பிரசாரம்
சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளா் ராணிஸ்ரீகுமாருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினா் புதன்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராணிஸ்ரீகுமாருக்கு ஆதரவாக திமுக, மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினா் தேரடித் திடலில் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். இதில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு,
சி.பி.எம். வட்டார செயலா் அசோக்ராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனா்.