தென்காசி, ஆய்க்குடியில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் டாக்டா் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து தென்காசி, ஆய்க்குடியில் அக்கட்சியினா் புதன்கிழமை இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டு நடுபல்க், கூலக்கடை பஜாா், மௌன்ட் ரோடு, கொடிமரம், திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலை வழியாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை அடைந்தனா்.

நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்தாா். மாவட்டஇளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, பொறியாளா் அணி மாவட்டத் தலைவா் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தனா்.

ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட முக்கிய வீதிகளில் பேரணியாகச் சென்று திமுக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.

தென்காசி பேரவைத் தொகுதிப் பொறுப்பாளா் கணேஷ்குமாா் ஆதித்தன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் திவ்யா மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இரு இடங்களிலும் மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வாக்கு சேகரித்தாா்.

மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சங்கீதா, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், ஆய்க்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com