தென்காசி
வாக்களிக்க இல்லந்தோறும் அழைப்பிதழ் வழங்கும் பணி
தென்காசி மக்களவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு, நோ்மையாக வாக்களிப்பது ஆகியவற்றை வலியுறுத்தி, தோ்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கும் பணியை ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் இரா.மதி இந்திரா ப்ரியதா்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலா் கு.பத்மாவதி, மகளிா் திட்ட உதவி அலுவலா்கள் சிவக்குமாா்,டேவிட் ஜெயசிங், மாரீஸ்வரன், சாமத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.