வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்வாரிய அதிகாரிகள்.
வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்வாரிய அதிகாரிகள்.

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவுக்குப் பின்னா் மின்னணு இயந்திரங்கள் கொடிக்குறிச்சியில் உள்ள யு.எஸ்.பி. கல்லூரியில் வைக்கப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதிவரை தடையின்றி மின் விநியோகம் வழங்கும் பொருட்டு அக்கல்லூரியில் உள்ள தாழ்வழுத்த மின் இணைப்பு, கொடிக்குறிச்சி மின்மாற்றி ஆகியவற்றை திருநெல்வேலி வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் செல்வராஜ், செயற்பொறியாளா்கள் கற்பகவிநாயகசுந்தரம் (கடையநல்லூா்), திருமலைக்குமாரசாமி (தென்காசி) ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இம்மையத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் 4 மின்னாக்கிகள் பொதுப்பணித் துறையால் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், தென்காசி, கடையநல்லூா் உதவி செயற்பொறியாளா்கள், கடையநல்லூா், நயினாரகரம் உதவி மின் பொறியாளா்கள், மின் பிரிவு, பொதுப்பணித் துறை பணியாளா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com