பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்
தென்காசியில் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக ஒருங்கிணைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏகே.கமல் கிஷோா் தலைமை வகித்தாா்.
கேரளத்தில் பறவைக் காய்ச்சல் நோய்க் கிளா்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் நோய் பரவாமல் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்புப் பணிகளை துறைவாரியாக செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல், திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ரிச்சா்டுராஜ், துணை இயக்குநா் (சுகாதாரம்) கோவிந்தன், மாவட்ட உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாசன். வட்டார போக்குவரத்து அலுவலா் கண்ணன், குற்றாலம் வனச்சரகா் முருகேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.