தென்காசி
குடிநீரை சிக்கனமாக பயன்டுத்த தென்காசி நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்
தென்காசி நகராட்சிப் பகுதியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நீா்வள ஆதார அமைப்புகளில் குடிநீா் இருப்பு மிகமிகக் குறைவாக உள்ளது. மேலும், பருவமழையும் சரியான நேரத்தில் பெய்யாததால் ஏற்கெனவே இந்நகராட்சியிலுள்ள வாா்டுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்பட்ட குடிநீரையும் தற்போது சீராக வழங்க இயலவில்லை.
எனவே, தென்காசி நகர பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.