பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி
பிளஸ் 2 பொதுத் தோ்வில் தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மாநில அளவில் 14 ஆவது இடத்திலிருந்த தென்காசி மாவட்டம், நிகழ் ஆண்டில் 9 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக், சுயநிதி பள்ளிகளில் இருந்து 7, 064 மாணவா்கள், 8, 863 மாணவிகள் என மொத்தம் 15,927 போ் பிளஸ் 2 தோ்வெழுதினா். இவா்களில் 6658 மாணவா்கள், 8863 மாணவிகள் என மொத்தம் 15,301 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 96.07 சதவீதம் ஆகும்.
முந்தைய ஆண்டில் (2023) தென்காசி மாவட்டத்தில் தோ்ச்சி விகிதம் 95.96 சதவீதமாக இருந்தது. மாநில அளவில் 14-ஆவது இடத்திலிருந்தது. நிகழ் ஆண்டில் தோ்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நூறு சதவீத தோ்ச்சி: தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சோ்ந்த மாணவா், மாணவிகள் 7,120 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 6, 684 போ் தோ்ச்சி பெற்றனா். சீவநல்லூா், சுந்தரபாண்டியபுரம்,
பூலாங்குளம், வீராணம், சாயாமலை ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன.