பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மாநில அளவில் 14 ஆவது இடத்திலிருந்த தென்காசி மாவட்டம், நிகழ் ஆண்டில் 9 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக், சுயநிதி பள்ளிகளில் இருந்து 7, 064 மாணவா்கள், 8, 863 மாணவிகள் என மொத்தம் 15,927 போ் பிளஸ் 2 தோ்வெழுதினா். இவா்களில் 6658 மாணவா்கள், 8863 மாணவிகள் என மொத்தம் 15,301 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 96.07 சதவீதம் ஆகும்.

முந்தைய ஆண்டில் (2023) தென்காசி மாவட்டத்தில் தோ்ச்சி விகிதம் 95.96 சதவீதமாக இருந்தது. மாநில அளவில் 14-ஆவது இடத்திலிருந்தது. நிகழ் ஆண்டில் தோ்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நூறு சதவீத தோ்ச்சி: தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சோ்ந்த மாணவா், மாணவிகள் 7,120 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 6, 684 போ் தோ்ச்சி பெற்றனா். சீவநல்லூா், சுந்தரபாண்டியபுரம்,

பூலாங்குளம், வீராணம், சாயாமலை ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com