தென்காசி ரயில் நிலையம் அருகே 
தங்கியிருந்த முதியவா்கள் 
முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

தென்காசி ரயில் நிலைய வளாகத்தில் ஆதரவின்றி தவித்த இரண்டு முதியவா்களை ரயில்வே காவல்துறையினா் மீட்டு முதியோா் இல்லத்தில் ஒப்படைத்தனா்.

சங்கரன்கோவில் வட்டம் வெள்ளாளன்குளம் பிரதான சாலையை சோ்ந்தவா் பண்ணைராம்(68), தென்காசி ஆசாத்நகா் தெற்கு தெருவைச் சோ்ந்த சி.கருப்பசாமி(57) ஆகிய இருவரும் தென்காசி ரயில் நிலைய வளாகப் பகுதியில் ஆதரவின்றி இருந்து வந்துள்ளனா்.

தென்காசி ரயில்வே காவல்துறையினா் இருவரையும் மீட்டு புதியஉடை வாங்கி அணிவித்து தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முதியோா் இல்லத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com