திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் போராட்டம் 10ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது.
கடந்த நவம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு மருத்துவர்களுக்கான கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும்.
அரசுப் பணியிலிருக்கும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வை மருத்துவத் தேர்வு வாரியத்தின் கலந்தாய்வுக்கு முன்பாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இவர்களுக்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.