குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர்கள் லட்சுமணன் மகன் செல்வகுமார் (23), முப்பிடாதி மகன் ரமேஷ் (25). இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் உள்ளன. இதனிடையே, இருவரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவதாகக் கூறி மாநகர காவல் துணை ஆணையர் கு.சுகுணசிங் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அளித்த பரிந்துரையை ஏற்று, 2 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் (பொ) கபில்குமார் சராட்கர் உத்தரவிட்டார். அதன்பேரில், இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனர்.