மழை வேண்டி பிரார்த்தனை

பாளையங்கோட்டை புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மழை வேண்டி சர்வ சமய பிரார்த்தனை நடைபெற்றது.

பாளையங்கோட்டை புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மழை வேண்டி சர்வ சமய பிரார்த்தனை நடைபெற்றது.
 பன்னாட்டு மத சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு அமைப்பின் துணைத் தலைவர் பி.டி. சிதம்பரம் தலைமை வகித்தார். இணைச் செயலர் கோ. கணபதிசுப்பிரமணியன், செயலர் கண்ணன், இணைப் பொருளாளர் அருணாசிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர காவல் கூடுதல் துணை ஆணையர் அ. இளங்கோ, முதியோர் இல்ல நிர்வாகி புஷ்பா, இந்திய செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் ஜமால்முகம்மதுஈசா, சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச் செயலர் சு. முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com