ஓடும் பேருந்தில் 10 பவுன் நகை திருட்டு

பாளையங்கோட்டையில் ஓடும் பேருந்தில் 10 பவுன் தங்க நகையைத் திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

பாளையங்கோட்டையில் ஓடும் பேருந்தில் 10 பவுன் தங்க நகையைத் திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் மனைவி செல்வபுஷ்பம் (61). இவர், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்ல பேருந்தில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்றாராம். பின்பு அங்கிருந்து மற்றொரு பேருந்தில் கே.டி.சி. நகருக்கு வியாழக்கிழமை இரவு சென்றுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் திருடியது தெரியவந்ததாம். இது குறித்த புகாரின்பேரில் பாளை. குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com