திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக். 6) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 4ஆம் கட்ட அம்மா திட்ட முகாம்கள் மார்ச் முதல் நடைபெறுகின்றன. இதன்படி வெள்ளிக்கிழமை (அக். 6) முகாம் நடைபெறும் இடங்கள்:
திருநெல்வேலி வட்டம் - பழவூர், ராதாபுரம் வட்டம் - சடையனேரி, அம்பாசமுத்திரம் வட்டம் - கீழ்முகம், நான்குனேரி வட்டம் - மூலைக்கரைப்பட்டி 2, சேரன்மகாதேவி வட்டம் - அத்தாளநல்லூர், பாளையங்கோட்டை வட்டம் - திடியூர், மானூர் வட்டம் - கட்டாரங்குளம், சங்கரன்கோவிலில் குவளைக்கண்ணி, திருவேங்கடத்தில் சங்குப்பட்டி, வீரகேரளம்புதூர் வட்டத்தில் மேலமருதப்பபுரம், ஆலங்குளம் வட்டத்தில் சுப்பையாபுரம், கடையநல்லூர் வட்டத்தில் அரியநாயகிபுரம்.
முகாம்களில், அந்தந்தப் பகுதியினர் கலந்துகொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு, இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாலை, குடிநீர் வசதி கோரி மனு அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாமிலேயே தீர்வு காணப்படும் என்றார்.